காய வைத்த நெல்லுக்கு விசமிகளால் தீவைப்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கருப்புள்ளியான் கிராமத்தில் அறுவடை செய்து தளத்தில் உலர விட்டிருந்த நெல்லுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்காக வைத்திருந்த சமயம் நேற்றிரவு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலரவிடப்பட்டிருந்த நெல் எரிந்து நாசமாகியுள்ளது